பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்
திருக்குறள் 847
Thirukkural Verse 847 — Petty Mindedness
அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு.
English Meaning
The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.
சாலமன் பாப்பையா
அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.
கலைஞர்
நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்