பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 873

    Thirukkural Verse 873 — Knowing the Quality of Hate

    Thiruvalluvar

    ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன்.


    English Meaning

    He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.

    சாலமன் பாப்பையா

    தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.

    கலைஞர்

    தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்