பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 899

    Thirukkural Verse 899 — Not Offending the Great

    Thiruvalluvar

    ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும்.


    English Meaning

    If those of exalted vows burst in a rage, even (Indra) the king will sufer a sudden loss and be entirely ruined.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.

    சாலமன் பாப்பையா

    உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.

    கலைஞர்

    உயர்ந்த கொள்கை உறுதி கொடண்வர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்