பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 908

    Thirukkural Verse 908 — பெண்வழிச் சேரல்

    Thiruvalluvar

    நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட் டாங்கு ஒழுகு பவர்.


    English Meaning

    Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.

    சாலமன் பாப்பையா

    தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.

    கலைஞர்

    ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள்