பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 931

    Thirukkural Verse 931 — Gambling

    Thiruvalluvar

    வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.


    English Meaning

    Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in fish-hook.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது.

    சாலமன் பாப்பையா

    வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியது போன்றதாம்.

    கலைஞர்

    வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக் கொண்டது போலாகிவிடும்