பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 942

    Thirukkural Verse 942 — Medicine

    Thiruvalluvar

    மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.


    English Meaning

    No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

    சாலமன் பாப்பையா

    ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.

    கலைஞர்

    உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை