பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்
திருக்குறள் 947
Thirukkural Verse 947 — Medicine
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்.
English Meaning
He will be aflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.
சாலமன் பாப்பையா
தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.
கலைஞர்
பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்