பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 952

    Thirukkural Verse 952 — Nobility

    Thiruvalluvar

    ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார்.


    English Meaning

    The high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.

    சாலமன் பாப்பையா

    நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.

    கலைஞர்

    ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்