பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 954

    Thirukkural Verse 954 — Nobility

    Thiruvalluvar

    அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்.


    English Meaning

    Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.

    சாலமன் பாப்பையா

    கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார்.

    கலைஞர்

    பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்