பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்
திருக்குறள் 970
Thirukkural Verse 970 — Honour
இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு.
English Meaning
The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than sufer indignity.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.
சாலமன் பாப்பையா
தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.
கலைஞர்
மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்