பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 984

    Thirukkural Verse 984 — Goodness

    Thiruvalluvar

    கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு.


    English Meaning

    Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others’ faults.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.

    சாலமன் பாப்பையா

    பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.

    கலைஞர்

    உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு