பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 989

    Thirukkural Verse 989 — Goodness

    Thiruvalluvar

    ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்.


    English Meaning

    Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.

    சாலமன் பாப்பையா

    சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்.

    கலைஞர்

    தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்