அறத்துப்பால் (Aram)Chapter 10: இனியவை கூறல்

    திருக்குறள் 99

    Thirukkural Verse 99 — The Utterance of Pleasant Words

    Thiruvalluvar

    இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது?


    English Meaning

    Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?

    சாலமன் பாப்பையா

    பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?

    கலைஞர்

    இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?