பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 991

    Thirukkural Verse 991 — Courtesy

    Thiruvalluvar

    எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு.


    English Meaning

    If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.

    சாலமன் பாப்பையா

    எவரும் தன்னை எளிதாகக் கண்டு பேசும் நிலையில் வாழ்ந்தால், பண்புடைமை என்னும் நல்வழியை அடைவது எளிது என்று நூலோர் கூறுவர்.

    கலைஞர்

    யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்