பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 996

    Thirukkural Verse 996 — Courtesy

    Thiruvalluvar

    பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்.


    English Meaning

    The (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perish.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.

    சாலமன் பாப்பையா

    பண்புடையவர்கள் வாழ்வதால்தான் மக்கள் வாழ்க்கை எப்போதும் நிலைத்து இருக்கிறது. அவர்கள் மட்டும் வாழாது போவார் என்றால். மனித வாழ்க்கை மண்ணுக்குள் புகுந்து மடிந்து போகும்.

    கலைஞர்

    உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும் இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்