பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 1004

    Thirukkural Verse 1004 — Wealth Without Beneficence

    Thiruvalluvar

    எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன்.


    English Meaning

    What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.

    சாலமன் பாப்பையா

    பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?

    கலைஞர்

    யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?