பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்
திருக்குறள் 1005
Thirukkural Verse 1005 — Wealth Without Beneficence
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல்.
English Meaning
Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.
சாலமன் பாப்பையா
தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும், தேவை கண்டு தாம் அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள் இருந்தாலும் இல்லாததே ஆகும்.
கலைஞர்
கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை