பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்
திருக்குறள் 1006
Thirukkural Verse 1006 — Wealth Without Beneficence
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று ஈதல் இயல்பிலா தான்.
English Meaning
He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.
சாலமன் பாப்பையா
தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே.
கலைஞர்
தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான்