பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 1023

    Thirukkural Verse 1023 — Way of Sustaining the Family

    Thiruvalluvar

    குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்.


    English Meaning

    The Deity will clothe itself and appear before him who resolves on raising his family.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.

    சாலமன் பாப்பையா

    என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.

    கலைஞர்

    தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்