பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 1024

    Thirukkural Verse 1024 — Way of Sustaining the Family

    Thiruvalluvar

    சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு.


    English Meaning

    Those who are prompt in their eforts (to better their family) need no deliberation, such eforts will of themselves succeed.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.

    சாலமன் பாப்பையா

    தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.

    கலைஞர்

    தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்