பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 1025

    Thirukkural Verse 1025 — Way of Sustaining the Family

    Thiruvalluvar

    குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு.


    English Meaning

    People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.

    சாலமன் பாப்பையா

    தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர் தம் சுற்றமாக ஏற்பர்.

    கலைஞர்

    குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்