பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 1046

    Thirukkural Verse 1046 — Poverty

    Thiruvalluvar

    நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்.


    English Meaning

    The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.

    சாலமன் பாப்பையா

    நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.

    கலைஞர்

    அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்