பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்
திருக்குறள் 1047
Thirukkural Verse 1047 — Poverty
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும்.
English Meaning
He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.
சாலமன் பாப்பையா
நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.
கலைஞர்
வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்