பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்
திருக்குறள் 1048
Thirukkural Verse 1048 — Poverty
இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு.
English Meaning
Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).
சாலமன் பாப்பையா
நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?
கலைஞர்
கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்