பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 1049

    Thirukkural Verse 1049 — Poverty

    Thiruvalluvar

    நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது.


    English Meaning

    One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.

    சாலமன் பாப்பையா

    யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.

    கலைஞர்

    நெருப்புக்குள் படுத்துக் தூங்குவதைகூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்