பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்
திருக்குறள் 1061
Thirukkural Verse 1061 — The Dread of Begging
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும்.
English Meaning
Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense good.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.
சாலமன் பாப்பையா
ஒளிவு மறைவு இல்லாமல், மனம் மகிழ்ந்து பிறர்க்குக் கொடுக்கும் இயல்பு உள்ளவரிடத்திலும் ஒன்றைக் கேட்கா திருப்பது கோடி நன்மையாகும்.
கலைஞர்
இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச்சிந்தையுடைவரிடம்கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்