பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 1062

    Thirukkural Verse 1062 — The Dread of Begging

    Thiruvalluvar

    இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்.


    English Meaning

    If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.

    சாலமன் பாப்பையா

    பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.

    கலைஞர்

    பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்