அறத்துப்பால் (Aram)Chapter 11: செய்ந்நன்றி அறிதல்

    திருக்குறள் 110

    Thirukkural Verse 110 — Gratitude

    Thiruvalluvar

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.


    English Meaning

    He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

    சாலமன் பாப்பையா

    எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை

    கலைஞர்

    எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை