அறத்துப்பால் (Aram)Chapter 11: செய்ந்நன்றி அறிதல்

    திருக்குறள் 109

    Thirukkural Verse 109 — Gratitude

    Thiruvalluvar

    கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்.


    English Meaning

    Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

    சாலமன் பாப்பையா

    முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.

    கலைஞர்

    ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது