காமத்துப்பால் (Inbam)Chapter 111: நலம் புனைந்துரைத்தல்

    திருக்குறள் 1114

    Thirukkural Verse 1114 — நலம் புனைந்துரைத்தல்

    Thiruvalluvar

    காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று.


    English Meaning

    If the blue lotus could see, it would stoop and look at the ground saying, “I can never resemble the eyes of this excellent jewelled one.”

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.

    சாலமன் பாப்பையா

    குவளைப் பூக்களால் காண முடியுமானால், சிறந்த அணிகளைப் பூண்டிருக்கும் என் மனைவியின் கண்ணைப் போல தாம் இருக்கமாட்டோம் என்று எண்ணி நாணத்தால் தலைகுனிந்து நிலத்தைப் பார்க்கும்.

    கலைஞர்

    என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், ``இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே!'' எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்