காமத்துப்பால் (Inbam)Chapter 111: நலம் புனைந்துரைத்தல்

    திருக்குறள் 1115

    Thirukkural Verse 1115 — நலம் புனைந்துரைத்தல்

    Thiruvalluvar

    அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு நல்ல படாஅ பறை.


    English Meaning

    No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

    சாலமன் பாப்பையா

    என் மனைவி தன் மென்மையை எண்ணாமல் அனிச்சம்பூவை அதன் காம்பின் அடிப்பகுதியைக் களையாமல் அப்படியே சூடிவிட்டாள். அதனால் நொந்து வருந்தும் இவள் இடுப்பிற்கு நல்ல மங்கல ஒலி இனி ஒலிக்காது.

    கலைஞர்

    அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்