காமத்துப்பால் (Inbam)Chapter 111: நலம் புனைந்துரைத்தல்
திருக்குறள் 1116
Thirukkural Verse 1116 — நலம் புனைந்துரைத்தல்
மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன்.
English Meaning
The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid’s countenance.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.
சாலமன் பாப்பையா
அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த இடத்திலிருந்து இடம் விட்டுக் கலங்கித் திரிகின்றன!
கலைஞர்
மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன