காமத்துப்பால் (Inbam)Chapter 113: நாணுத் துறவுரைத்தல்

    திருக்குறள் 1135

    Thirukkural Verse 1135 — Yearning of the Wife

    Thiruvalluvar

    தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர்.


    English Meaning

    She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.

    சாலமன் பாப்பையா

    மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.

    கலைஞர்

    மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்