காமத்துப்பால் (Inbam)Chapter 113: நாணுத் துறவுரைத்தல்

    திருக்குறள் 1137

    Thirukkural Verse 1137 — Yearning of the Wife

    Thiruvalluvar

    கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்க தில்.


    English Meaning

    There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.

    சாலமன் பாப்பையா

    அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.

    கலைஞர்

    கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை