காமத்துப்பால் (Inbam)Chapter 113: நாணுத் துறவுரைத்தல்
திருக்குறள் 1139
Thirukkural Verse 1139 — Yearning of the Wife
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு.
English Meaning
My lust, feeling that it is not known by all, reels confused in the streets (of this town).
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.
சாலமன் பாப்பையா
என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.
கலைஞர்
என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!