காமத்துப்பால் (Inbam)Chapter 113: நாணுத் துறவுரைத்தல்

    திருக்குறள் 1140

    Thirukkural Verse 1140 — Yearning of the Wife

    Thiruvalluvar

    யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு.


    English Meaning

    Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.

    சாலமன் பாப்பையா

    நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!

    கலைஞர்

    காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்