காமத்துப்பால் (Inbam)Chapter 115: பிரிவாற்றாமை

    திருக்குறள் 1152

    Thirukkural Verse 1152 — Separation Unbearable

    Thiruvalluvar

    இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு.


    English Meaning

    His very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separation.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது.

    சாலமன் பாப்பையா

    அவர் பார்வை எனக்கு மகிழ்ச்சிதான். அவர் செயலோ பிரியப் போகிறார் என்ற அச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறதே!

    கலைஞர்

    முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல் தழுவிக் களிக்கும் போதுகூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது!