காமத்துப்பால் (Inbam)Chapter 115: பிரிவாற்றாமை

    திருக்குறள் 1151

    Thirukkural Verse 1151 — Separation Unbearable

    Thiruvalluvar

    செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை.


    English Meaning

    If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்.

    சாலமன் பாப்பையா

    என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.

    கலைஞர்

    பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல் நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள்