காமத்துப்பால் (Inbam)Chapter 115: பிரிவாற்றாமை
திருக்குறள் 1157
Thirukkural Verse 1157 — Separation Unbearable
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை.
English Meaning
Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord ?
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ.
சாலமன் பாப்பையா
அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ?
கலைஞர்
என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!