காமத்துப்பால் (Inbam)Chapter 115: பிரிவாற்றாமை

    திருக்குறள் 1158

    Thirukkural Verse 1158 — Separation Unbearable

    Thiruvalluvar

    இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு.


    English Meaning

    Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one’s lover.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.

    சாலமன் பாப்பையா

    உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை.

    கலைஞர்

    நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது