காமத்துப்பால் (Inbam)Chapter 116: படர்மெலிந் திரங்கல்

    திருக்குறள் 1167

    Thirukkural Verse 1167 — படர்மெலிந் திரங்கல்

    Thiruvalluvar

    காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன்.


    English Meaning

    I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    காமம் என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.

    சாலமன் பாப்பையா

    காதல் துன்பமாகிய கடலை நீந்தியும் என்னால் கரை காண முடியவில்லை. நள்ளிரவுப் பொழுதினும் உறங்காமல் நான் தனியாகவே இருக்கிறேன்.

    கலைஞர்

    நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன்