காமத்துப்பால் (Inbam)Chapter 116: படர்மெலிந் திரங்கல்

    திருக்குறள் 1168

    Thirukkural Verse 1168 — படர்மெலிந் திரங்கல்

    Thiruvalluvar

    மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லை துணை.


    English Meaning

    The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.

    சாலமன் பாப்பையா

    பாவம் இந்த இரவு! இது எல்லா உயிர்களையும் தூங்கச் செய்துவிட்டுத் தனியாகவே இருக்கிறது. இதற்கு என்னைத் தவிர வேறு துணை இல்லை!

    கலைஞர்

    `இரவே! உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நீ உறங்கச் செய்துவிட்டுப் பாவம் இப்போது என்னைத்தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய்.'