அறத்துப்பால் (Aram)Chapter 12: நடுவு நிலைமை
திருக்குறள் 119
Thirukkural Verse 119 — Impartiality
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்.
English Meaning
Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.
சாலமன் பாப்பையா
மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.
கலைஞர்
நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை