அறத்துப்பால் (Aram)Chapter 12: நடுவு நிலைமை
திருக்குறள் 120
Thirukkural Verse 120 — Impartiality
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்.
English Meaning
The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.
சாலமன் பாப்பையா
பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.
கலைஞர்
பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்