காமத்துப்பால் (Inbam)Chapter 119: தனிப்படர் மிகுதி
திருக்குறள் 1195
Thirukkural Verse 1195 — Solitary Sorrow
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை.
English Meaning
He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?
சாலமன் பாப்பையா
நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்?
கலைஞர்
நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?