காமத்துப்பால் (Inbam)Chapter 119: தனிப்படர் மிகுதி

    திருக்குறள் 1197

    Thirukkural Verse 1197 — Solitary Sorrow

    Thiruvalluvar

    பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான்.


    English Meaning

    Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?

    Share this result

    Generate a beautiful card to share on WhatsApp or social media. Your link gives friends a 14-day Full Pro trial.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ( காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?

    சாலமன் பாப்பையா

    ஆண், பெண் இருவரிடமும் இருந்து செயல் ஆற்றாமல் ஒருவரிடம் மட்டுமே போரிடும் காமன், இன்னொருவரின் மேனி நிற வேறுபாட்டால் வரும் துன்பத்தையும் வருத்தத்தையும் அறிய மாட்டானோ?

    கலைஞர்

    காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்!