காமத்துப்பால் (Inbam)Chapter 120: நினைந்தவர் புலம்பல்
திருக்குறள் 1205
Thirukkural Verse 1205 — Memories
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல்.
English Meaning
He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?
சாலமன் பாப்பையா
தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?
கலைஞர்
அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்