காமத்துப்பால் (Inbam)Chapter 120: நினைந்தவர் புலம்பல்
திருக்குறள் 1206
Thirukkural Verse 1206 — Memories
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான் உற்றநாள் உள்ள உளேன்.
English Meaning
I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?
சாலமன் பாப்பையா
அவரோடு கூடி வாழ்ந்த நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். இல்லை என்றால், வேறு எதனால் வாழ்வேன்?
கலைஞர்
நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?