காமத்துப்பால் (Inbam)Chapter 120: நினைந்தவர் புலம்பல்
திருக்குறள் 1207
Thirukkural Verse 1207 — Memories
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும்.
English Meaning
I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?
சாலமன் பாப்பையா
அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?
கலைஞர்
மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?