காமத்துப்பால் (Inbam)Chapter 121: கனவுநிலை உரைத்தல்

    திருக்குறள் 1215

    Thirukkural Verse 1215 — Dream Visions

    Thiruvalluvar

    நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது.


    English Meaning

    I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.

    சாலமன் பாப்பையா

    முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்.

    கலைஞர்

    காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!